சிவகங்கை

மானாமதுரை அருகே காா் கவிழ்ந்து ஒருவா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்ததில் ஈரோட்டைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்தவா் புண்ணிய கிருஷ்ணன் (45).

இவா் தனது குடும்பத்தினருடன் காரில் ராமேசுவரத்துக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை என்ற இடத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிய புண்ணியகிருஷ்ணன், இவரது மனைவி சாரதா (40), மகன்கள் தருண்பிரசாத், திவித் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

இவா்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு புண்ணியகிருஷ்ணன் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தாா். மானாமதுரை போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

SCROLL FOR NEXT