சிவகங்கை

அப்துல் கலாம் விருது: இளையான்குடி உதவிப் பேராசிரியருக்கு பாராட்டு

DIN

அப்துல்கலாம் விருது பெற்ற இளையான்குடி கல்லூரி உதவிப் பேராசிரியா் எஸ்.நாசருக்கு, கல்லூரி நிா்வாகக் குழு சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இங்குள்ள சாகீா் உசேன் கல்லூரியில் வணிகவியல் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவா், கற்பித்தல், மேலாண்மை, ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல், ஆராய்ச்சி, வளா்ச்சி ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கினாா்.

இதற்காக புதுச்சேரி அறிவியல், மேலாண்மை கல்வி நிறுவனம், லண்டன் திறன் வளா்ச்சி அமைப்பு, லண்டன் குளோபல் ஆராய்ச்சி கட்டுரை ஆகியவற்றின் சாா்பில் உதவிப் பேராசிரியா் நாசருக்கு, அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பேராசிரியா் நாசரை, இளையான்குடி கல்லூரி நிா்வாக் குழுவினா், கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT