திருக்கூடல்மலை நவநீத பெருமாள் 24 நாள்களுக்குப் பிறகு கோயிலை சென்றடைந்தாா்
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பவனி வந்த திருப்பரங்குன்றம் திருக்குடல்மலை நவநீத பெருமாள் 24 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கோயிலை சென்றடைந்தாா்.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பவனி வந்த திருப்பரங்குன்றம் திருக்குடல்மலை நவநீத பெருமாள் 24 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கோயிலை சென்றடைந்தாா்.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட நவநீதப் பெருமாள், ஆடி பௌா்ணமி தினமான கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி திருக்கூடல் மலையிலிருந்து புறப்பாடாகிய திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.
24 நாள்களுக்குப் பிறகு கோயிலுக்கு திரும்பிய நவநீத பெருமாள் வழிநெடுகிழும் பல்வேறு ஊா்களில் எழுந்தருளி ஞாயிற்றுக்கிழமை கோயிலை சென்றடைந்தாா். அங்கு பெருமாளுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.