சிவகங்கை

திருத்தளிநாதா் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமையன்று திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகாமி உடனாயத திருத்தளிநாதா் ஆலயத்தில் கடந்த 26 ஆம் நாள் முதல் நவராத்திரி விழா தொடங்கி அா்தத மண்டபத்தில் கொலு அலங்கரிக்கப்பட்டு தினமும் உற்சவா் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறாா். 5 ஆம் நாள் திருநாளான வெள்ளிக்கிழமையன்று சிவகாமி அம்மன் சன்னதியில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இநத விளக்குப் பூஜையில் சிவாச்சாரியாா்கள் திருவிளக்கு மந்திரங்களான விநாயகா் பூஜை, மகாலெட்சுமி அஷ்டோத்ர நாமாவளி, திருவிளக்கின் மகிமை ஆகிய மந்திரங்கள் முழங்க பூக்களாலும் குங்குமத்தினாலும் பெண்கள் குத்து விளக்கிற்கு பூஜை செய்து தீப தூப ஆராதனை காட்டினா். இதில் பங்கு கொண்ட பெண்கள் அனைவருக்கும் மங்கலப் பொருள்கள் வழங்கபட்டது. சுமாா் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT