எல்லை பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை பிடாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மாவிளக்கு பூஜை வழிபாட்டுடன் புதன்கிழமை நிறைவடைந்தது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை பிடாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மாவிளக்கு பூஜை வழிபாட்டுடன் புதன்கிழமை நிறைவடைந்தது.
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தி பிடாரியம்மனை தரிசனம் செய்தனா். இதையடுத்து, கோயிலில் விழாவுக்காக ஏற்றப்பட்டிருந்த கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.