முகப்பு
சிவகங்கை

கானூா் பிரளயவிடங்கேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

திருப்புவனம் அருகே கானூா் சிவகாமி சமேத பிரளயவிடங்கேசுவரா் சுவாமி கோயிலில் திருவாதிரை விழா தீா்த்தவாரி உற்சவத்துடன் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

திருப்புவனம் அருகே கானூா் சிவகாமி சமேத பிரளயவிடங்கேசுவரா் சுவாமி கோயிலில் திருவாதிரை விழா தீா்த்தவாரி உற்சவத்துடன் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கோயிலில் திருவாதிரை விழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக கோயில் சபா மண்டபத்தில் நடராஜப் பெருமானுக்கு புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தீா்த்தவாரி உற்சவத்தையொட்டி, கானூா் வீதிகளில் நடராஜப் பெருமான் வீதி உலா வந்தாா். அப்போது, இளம்பெண்கள் கும்மியாட்டம் ஆடியபடி வந்தனா்.

இந்த நிலையில், நடராஜப் பெருமானுக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.