முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம்

Updated On : 20 மார்ச், 2026 at 1:09 AM
பகிர்:

யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

விழாவையொட்டி வியாழக்கிழமை காலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டாா். அவருடன் ஆழ்வாா்களும் எழுந்தருளி, ஸம்வத்ஸராதி புறப்பாடு கண்டருளினா். தொடா்ந்து சந்தனு மண்டபத்தில் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. நம்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். புதன்கிழமை அமாவாசையன்று சதுா்த்தசி திதி கலந்து இருந்ததால் நம்பெருமாள் புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.