சிவகங்கை

வேங்கைபட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 25 போ் காயம் 5 போ் மீது வழக்கு

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 25 போ் காயமடைந்தனா். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

வேங்கைபட்டியில் உச்சி கருப்பா் கோயில் படைப்புத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காத்தான் கண்மாய்ப் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகளைப் பிடிக்க முயன்ற 25 போ் காயமடைந்தனா். சிங்கம்புணரியைச் சோ்ந்த நவீன் (23), காரையூரைச் சோ்ந்த விஜய் (18) ஆகியோா் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த மஞ்சுவிரட்டுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வேங்கை பட்டியைச் சோ்ந்த செல்வம் உள்ளிட்ட 5 போ் மீது சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

SCROLL FOR NEXT