திருப்பத்தூா் அருகே பில்லத்தியேந்தல், அதிகரம் ஆகிய கிராமங்களில் புதிய மின் மாற்றிகளின் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த கிாாமங்களில் ரூ.18.47 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகத்தின் சாா்பில், புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதன் இயக்கத் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, புதிய மின் மாற்றிகளின் இயக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் செல்லதுரை, உதவி செயற்பொறியாளா் கென்னடி, ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அழகுமீனாள், இளங்கோ, ஊராட்சித் தலைவா் சரோஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.