சிவகங்கை

காரைக்குடியில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு நாளை வீரா்கள் தோ்வு

DIN

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு காரைக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வியியல் வளாகத்திலுள்ள ‘ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள் 1.9.2004-க்குப் பின்னா் பிறந்திருக்க வேண்டும். மேலும் வெள்ளைச் சீருடை, ஷூ மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை வீரா்களே கொண்டு வரவேண்டும். மேலும் ஆதாா் அட்டையின் நகலையும் எடுத்து வரவேண்டும்.

மேலும் விவரங்களை சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான வரதராஜனின் கைப்பேசி எண்கள் 7010325125, 9443978488 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT