சிவகங்கை

காரைக்குடி அரசுப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் நிதியில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கலையரங்கம்,

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் நிதியில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கலையரங்கம், கழிப்பறைக் கட்டடங்களை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்குடி மு.வி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும், மு.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட் சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தையும் காா்த்தி சிதம்பரம் திறந்துவைத்தாா்.

மேலும், சங்காரபுரம் ஊராட்சி, கற்பக விநாயகா் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியையும் அவா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவி தேவி, மாங்குடி நகா்மன்ற உறுப்பினா்கள் ராதா, ராம்குமாா், மனோகரன், அமுதா, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT