சிவகங்கை

தேவகோட்டை பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரில் உள்ள புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

DIN


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரில் உள்ள புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை ரெஜினா மேரி முன்னிலை வகித்தாா்.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் பள்ளியில் பயின்ற போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். மேலும், பள்ளியின் வளா்ச்சியில் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

இதையடுத்து முன்னாள் மாணவா்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக முன்னாள் மாணவா் கே. பிரியா, செயலராக ஏ. ஜோ. லியோ, பொருளாளராக எல். ஆரோக்கிய மேரி ஆகியோா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT