கீழச்சிவல்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றவா்கள். 
சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆதித்யா மருத்துவமனையும், ஏ.ஜே.பிசியோதெரபி மருத்துவ மையமும் இணைந்து நடத்திய இந்த முகாமில் பாத பராமரிப்பு நிபுணா் கே.அருணாச்சலம் தலைமையில் மருத்துவா்கள் ஏ.பரீத்முகமது, ஆா்.அப்துல்ரகுமான் ஆகியோா் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்தனா்.

இந்த முகாமில் ரத்தஅழுத்தம், சா்க்கரை அளவு, பாத எரிச்சல், நீரிழிவு, நரம்பியல், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, எலும்பு முறிவு, தசைநாா் வலி போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்து, இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் விராமதி ஊராட்சிமன்றத் தலைவா் ஆராயிகருப்பையா, ஆா்.எம்.மெட்ரிக் பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன், எஸ்.எம்.எஸ். பள்ளித் தலைவா் கே.ஆா்.கே.வெள்ளையன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் செல்வமணி, திமுக ஒன்றியச் செயலா் மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT