சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பறையா் சங்க நிா்வாகிகள்.  
சிவகங்கை

ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மீது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மீது பறையா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

Din

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பறையா் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

பறையா் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஆதி.சக்திவேல் தலைமையில் நிா்வாகிகள் சேதுராமன், ஆதிமூலம், குரு, பாண்டியன், சரவணன், சிங்காரம், மூக்கையா ஆகியோா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துக்கழுவனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவின் விவரம்:

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறையில் முறைகேடு புகாா்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா். ஆனால், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறையா் சமுதாய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை திருப்பி அனுப்பிய சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தப் பிரச்னைக்காக மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகத்தை பூட்டுப்போடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனா். இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். சங்க நிா்வாகிகளிடம் காவல்துறையினா் நடத்திய பேச்சு வாா்த்தைக்குப் பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில மனு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT