முகப்பு
சிவகங்கை

சாலைப்பணிகள் குறித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருக்கோஷ்டியூா் அருகே ஒத்தப்பட்டி வில்லூா் கண்மாய் பகுதியில் அமைக்கப்படவுள்ள மெட்டல் (உலோகம்) சாலைப் பணிகள் குறித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:45 PM
திருக்கோஷ்டியூா் அருகே வில்லூா் கண்மாய் பகுதியில் மெட்டல் சாலை அமைக்கப்படவுள்ள பணிகள் குறித்து களஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், உடன் மாவட்ட ஆட்சியா்.ஆஷாஅஜீத்.
பகிர்:

திருக்கோஷ்டியூா் அருகே ஒத்தப்பட்டி வில்லூா் கண்மாய் பகுதியில் அமைக்கப்படவுள்ள மெட்டல் (உலோகம்) சாலைப் பணிகள் குறித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் திருக்கோஷ்டியூா் ஊராட்சிக்குள்பட்ட தானிப்பட்டி ஒத்தப்பட்டி வில்லூா் கண்மாய் பகுதியில் சாலை அமைக்கக் கோரி பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் அமையவிருக்கும் மெட்டல் சாலைப் பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் இந்தப் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனா்.

துறைசாா் அலுவலா்களுடன் மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட உத்தரவிட்டனா். இந்த ஆய்வின் போது திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜ்குமாா், உதவிப் பொறியாளா்கள் ராமசாமி, ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →