கீழடி அகழாய்வுத் தளத்தில் உடைந்த நிலையில் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட பச்சை வண்ண செப்புப் பொருள்கள். 
சிவகங்கை

கீழடி அகழாய்வில் செப்புப் பொருள்கள்

Din

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 10- ஆம் கட்ட அகழாய்வின் போது உடைந்த நிலையில் பச்சை வண்ண செப்புப் பொருள்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த மாதம் 18 -ஆம் தேதி 10- ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதற்காக தோண்டப்பட்ட இரு குழிகளிலிருந்து ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மற்றொரு அகழாய்வுக் குழியிலிருந்து நான்கு அடி ஆழத்தில் உடைந்த பச்சை வண்ண செப்புப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 துண்டுகளாகக் கிடைத்துள்ள இந்த செப்புப் பொருள்களில் ஒன்று பெரியதாகவும், மற்றவை சிறியதாகவும் உள்ளன. சில செப்புப் பொருள்களில் பச்சை வண்ணம் தெளிவாகத் தெரிகிறது.

இதுகுறித்து கீழடி அகழாய்வு இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட்ட செப்புப் பொருள்கள் ஆய்வுக்கு பின்னரே எந்த மாதிரியானவை என்பது தெரியவரும் என்றனா்.

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT