கீழடி அகழாய்வில் செப்புப் பொருள்கள்
திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 10- ஆம் கட்ட அகழாய்வின் போது உடைந்த நிலையில் பச்சை வண்ண செப்புப் பொருள்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த மாதம் 18 -ஆம் தேதி 10- ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதற்காக தோண்டப்பட்ட இரு குழிகளிலிருந்து ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், மற்றொரு அகழாய்வுக் குழியிலிருந்து நான்கு அடி ஆழத்தில் உடைந்த பச்சை வண்ண செப்புப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 துண்டுகளாகக் கிடைத்துள்ள இந்த செப்புப் பொருள்களில் ஒன்று பெரியதாகவும், மற்றவை சிறியதாகவும் உள்ளன. சில செப்புப் பொருள்களில் பச்சை வண்ணம் தெளிவாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கீழடி அகழாய்வு இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட்ட செப்புப் பொருள்கள் ஆய்வுக்கு பின்னரே எந்த மாதிரியானவை என்பது தெரியவரும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.