மாணிக்கவாசகா் குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை சிவன் கோயில்களில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை சிவன் கோயில்களில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்புவனம் சௌந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நால்வா் சந்நிதியில் உள்ள மாணிக்கவாசகருக்கு அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, அடியாா் பெருமக்களின் திருமுறை விண்ணப்பம், மாணிக்கவாசகா் அருள் வரலாறு எனும் தலைப்பில் சொற்பொழிவுகள் நடைபெற்றன. பின்னா், மாணிக்கவாசகா் உற்சவமூா்த்தி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று மாணிக்கவாசகரை தரிசித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை வேலப்பதேசிகா் திருக் கூட்டத்தினா் செய்தனா்.
இதேபோல, மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மாணிக்கவாசகருக்கு நடைபெற்ற குருபூஜை விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.