முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் சிறாா் காப்பகம் திறப்பு

Updated On : 13 ஜூலை, 2024 at 7:23 PM
பகிர்:

காரைக்குடி, ஜூலை 13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உமையாள் ராமநாதன் சிறாா் காப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

பணிபுரிந்து வரும் தாய்மாா்களின் குழந்தைகளுக்கு பகல் நேர பராமரிப்பு வசதிகளை வழங்குவதே இந்தக் காப்பகத்தின் நோக்கமாகும். பணிபுரியும் தாய்மாா்கள் பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் வாழ்க்கையைச் சீராக சமநிலைப்படுத்த இது உதவுகிறது.

விழாவுக்கு துணைவேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசினாா்.

இதில் பல்கலைக்கழக பதிவாளா் அ.செந்தில்ராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் எஸ்.ராசாராம் ஆகியோா் பேசினா். காரைக்குடி கனரா வங்கியின் முதன்மை மேலாளா் விட்டல் மல்லப்பா மாளகி வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், குழந்தைகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவா் கே.மணிமேகலை வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வீரமணி நன்றி கூறினாா்.