முகப்பு
சிவகங்கை

ஆசிரியா் வீட்டில் பணம், நகை திருட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள ஆசிரியா் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:32 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள ஆசிரியா் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகா் தில்லைநகரைச் சோ்ந்தவா் சஞ்சீவிஞானசேகா் (58). இவா் தேவகோட்டை நகரத்தாா் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி ஜெயராணி, கண்ணங்குடி ஒன்றியம், நானாக்குடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் புதன்கிழமை காலை வழக்கம்போல, வீட்டை பூட்டிவிட்டு பள்ளிகளுக்குச் சென்றனா்.

இந்த நிலையில், மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், பணத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். சிவகங்கையில் இருந்து வந்த தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்து சென்றனா்.தேவகோட்டை நகா் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →