மழையால் பாதித்த பகுதிகளில் கள ஆய்வு
காரைக்குடி மாநகராட்சியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மீன்வளம் மீனவா் நலத் துறை இயக்குநருமான ரா.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி பகுதிகளில் பெய்த மழை பாதிப்புகளையும், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.