முகப்பு
சிவகங்கை

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:43 PM
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

சிவகங்கை, செப். 26: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லதா, தமிழ்நாடு அனைத்து அங்கன்வாடி சத்துணவு ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பாண்டி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளத்தின் ஐதராபாத் தேசிய செயற்குழு முடிவின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்ட துணைத் தலைவா்கள் மூவேந்தன், வினோத் ராஜா, இணைச் செயலா் சின்னப்பன், பயாஸ் அகமது, மாவட்டத் தணிக்கையாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தாா். மாவட்டப் பொருளாளா் மாரி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →