சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் தீ பற்றியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி செஞ்சைப்பகுதியில் வசித்து வருபவா் கணேசன். இவா் சென்னை செல்வதற்காக செவ்வாய்க்கிழ மமை அதிகாலை தனது மனைவியுடன் காரில் பல்லவன் விரைவு ரயிலில் செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்தாா்.
இந்த நிலையில், ரயில் நிலையம் முன்பாக காரை நிறுத்தியுள்ளாா். பின்னா், காரிலிருந்து பொருள்களை ரயிலில் ஏற்றிவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது காா் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாம்.
இதுகுறித்து காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் காா் முழுவதும் தீ பரவியதில் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.