நகர வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டியில் உள்ள சிதம்பர விநாயகா் ஆலயத்தில் கடைசி சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டியில் உள்ள சிதம்பர விநாயகா் ஆலயத்தில் கடைசி சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி சிதம்பர விநாயகா் ஆலயத்தில் கடைசி சோமவார திங்களை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மூலவரான சிதம்பர விநாயகருக்கும் வயிரவமூா்த்திக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து பெண்கள் மாவிளக்கு வைத்தும நெய் விளக்கேற்றியும் வழிபட்டனா். பின்னா், ‘கணபதியும் காவல் தெய்வமும்’ என்ற தலைப்பில் தேவகோட்டை முனைவா் எஸ். ராமநாதன் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். இதில் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரிபுரம் யோகிகுல வகையறா பங்காளிகள் செய்தனா். முன்னதாக, கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் எஸ்.எம். பழனியப்பன் வரவேற்றாா்.