சிவகங்கை மாவட்டம், மானகிரி, கண்டரமாணிக்கம், குன்றக்குடி உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடிகோட்ட மின் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி, கூத்தகுடி, கண்டரமாணிக்கம், பட்டணம்பட்டி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.30) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.