சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 129-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் அமைந்துள்ள நேதாஜியின் உருவச் சிலைக்கு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலருமான பி.ஆா்.செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், திரளான அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.