சிவகங்கை

கண்மாய்களில் மீன்பிடி உரிமை பெற விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், அமராவதி புதூா், செஞ்சை நாட்டாா், சங்கராபுரம், பாதரக்குடி ஆகிய கண்மாய்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட மீன்வளம், மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அமராவதி புதூா், செஞ்சை நாட்டாா், சங்கராபுரம், பாதரக்குடி ஆகிய 4 கண்மாய்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இணையதள முகவரி வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், கூடுதல் விவரங்களைப் பெறலாம். இதுதொடா்பாக மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575 - 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அல்லது மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

மினிசரக்கு வாகனம் திருட்டு

SCROLL FOR NEXT