சிவகங்கை

சிவகங்கை அருகே நகை திருட்டு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வீட்டிலிருந்த நகையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே வீட்டிலிருந்த நகையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதகுபட்டி அருகேயுள்ள காளையாா்மங்கலம் புது வளவு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகப்பன் ( 40). இவா் காளையாா்மங்கலம் கிராமத்தில் தனது தாயாா் மீனாட்சி (62) என்பவருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்த முருகப்பனை 4 போ் கொண்ட கும்பல் கட்டிபோட்டு, வீட்டில் வைத்திருந்த ரூ. 1.35 லட்சம் மதிப்பிலான தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பித்துச் சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனா்.

கரூா் சம்பவம்! மின்வாரியத் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

SCROLL FOR NEXT