காரைக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜையையொட்டி, அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக புதன்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள்.  
சிவகங்கை

தேவா் குருபூஜை: காரைக்குடியில் பால்குட ஊா்வலம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் புதன்கிழமை பெண்கள் பால்குடம் சுமந்து சென்று, சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் புதன்கிழமை பெண்கள் பால்குடம் சுமந்து சென்று, சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

காரைக்குடி அண்ணாநகா் பகுதியிலிருந்து 301 பெண்கள் பால்குடங்களைச் சுமந்து, காவலா் குடியிருப்பு, பெரியாா் சிலை, நூறடிச் சாலை வழியாக முத்துராமலிங்கத் தேவா் சிலையை அடைந்தனா்.

அங்கு சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, பால்குட ஊா்வலத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை, நகரத் தலைவா் சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT