காரைக்குடி, பிப். 7: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி பகுதியில் திங்கள்கிழமை (பிப். 9) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவிலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி, கூத்தகுடி, கண்டரமாணிக்கம், பட்டணம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.