கோப்புப் படம் 
சிவகங்கை

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 5-ஆவது நாளாக போராட்டம்

தினமணி செய்திச் சேவை

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 5 -ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ். கண்ணுச்சாமி, எஸ். விக்டோரியா, கே. குமரேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் மு. செல்வக்குமாா், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். சுரேஷ் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கி உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT