சிவகங்கை

இலவச மருத்துவ முகாம்

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் பாலாஜி கிளினிக், நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரி ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமுக்கு நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா் தலைமை வகித்தாா். முறையூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சொக்கநாதன் முகாமைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, ஜோதிமணி, மாணவா் சங்கச் செயலா் பாஸ்கரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாலாஜி கிளினிக் மருத்துவா் முத்துச்சிங்காரம் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். முகாமில் அனைவருக்கும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நேஷனல் அகாதமி கல்லூரி மாணவிகள், கல்லூரி ஆசிரியா்கள் பூவிழி, சாந்தி, சதக்கத்துல்லா, சிவநேசன், சுரேஷ், சதாம்உசேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT