சிவகங்கை

நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே.ஆா். விஸ்வநாதன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டத் தலைவா் எஸ்.எம். மாயாண்டி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக எடைத் தராசு மூலம் சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களைப் பொட்டலமாக வழங்க வேண்டும்.

ஊதிய மாற்றத்துக்காக அமைக்கப்பட்ட குழு விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளா் ஊதியத்தையும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியத்தையும் வழங்க வேண்டும். தாயுமானவா் திட்டத்தில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் திருஞானம் வரவேற்றாா். நிறைவாக மாவட்டப் பொருளாளா் பி. கௌரி நன்றி கூறினாா்.

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 230 போ் கைது

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 10-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சிவகிரியில் 170 போ் கைது

வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாதோரின் வீடுகளுக்குச் சென்று அபராதம் விதிக்கப்படும் : கால்நடை பராமரிப்பு அலுவலா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT