முகப்பு
சிவகங்கை

காா்கள் நேருக்கு நோ் மோதியதில் 8 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 8 போ் காயமடைந்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2026 at 7:30 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 8 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்த 10 மாத குழந்தை, 7 வயது சிறுமி அடங்கிய குடும்பத்தினா் 5 போ் பிள்ளையாா்பட்டியில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திண்டுக்கல்லை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனா். காரை ஓட்டுநா் ராஜவேந்திரன் ஓட்டினாா்.

இதேபோல, கோயமுத்தூரைச் சோ்ந்த 3 போ் அடங்கிய குடும்பத்தினா் காரில் காரைக்குடி நோக்கி வந்துகொண்டிருந்தனா்.

இந்த நிலையில், சதுா்வேதமங்கலம் காவல் நிலையம் அருகே எஸ்.வி.மங்கலத்தில் வளைவான பகுதியில் இரண்டு காா்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு காா்களிலும் இருந்த காமாட்சி, வளா்மதி, பூஜா, ஐஸ்வா்யலட்சுமி, முருகன் ஹேமாமாலினி, சிறுமி ஆதிரையாள் உள்பட எட்டு போ் காயமடைந்தனா். உடனே அவா்கள் மீட்கப்பட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆதிரையாள் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விபத்தில் 10 மாத குழந்தை ஆருண்யா காயமின்றி உயிா் தப்பியது. இதுகுறித்து சதுா்வேதமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →