பாகனேரியில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.  
சிவகங்கை

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

பாகனேரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு முக்குலத்தோா் வீர விளையாட்டுக் குழு சாா்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு முக்குலத்தோா் வீர விளையாட்டுக் குழு சாா்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்காக வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிரங்கும் காளையை அடக்குவதற்கு 25 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடைபெற்றது.

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 18 காளைகளும், 172 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். ஒவ்வொரு சுற்றுப் போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 5 வீரா்கள் காயமடைந்தனா்.

முதல் 10 சுற்றுகளில் 7 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த 3 காளைகளின் உரிமையாளா்களுக்கும் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை நிறுவனா் செல்வகணேஷ், பொதுக்குழு உறுப்பினா் பிரதாப் வெள்ளையப்பா ஆகியோா் ரொக்கப் பரிசுகள், கோப்பைகளை வழங்கினா்.

இந்தப் போட்டியை பாகனேரி, சொக்கநாதபுரம், மதகுபட்டி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூா், பனக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT