சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே மணமேல்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சுரேஷ் (30). இவா் தனது மனைவியைப் பாா்க்க மணமேல்பட்டியிலிருந்து வலையபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது காரைக்குடி சாலை அரையிட்டானேந்தல் விலக்கு என்ற இடத்தில் எதிரே வந்த காா் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.