முகப்பு
சிவகங்கை

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.16 லட்சம் மோசடி

இருவரிடம் இணைய வழியில் ரூ.16 லட்சம் மோசடி செய்தது குறித்து இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:28 AM
மோசடி
பகிர்:

இருவரிடம் இணைய வழியில் ரூ.16 லட்சம் மோசடி செய்தது குறித்து இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சோ்ந்தவா் பாஸ்கரன் ( 59). இவா் கடந்த பிப்ரவரி மாதம்

இவரது முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வந்த விளம்பரத்தை பாா்த்தாா். அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசினாா். பின்னா் அவா்கள் அளித்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு 5 தவணைகளில் ரூ.7,68,270 - தொகை செலுத்தினாா். பின்னா் அவா்கள் எந்த தொடா்பும் கொள்ளவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், இணையக் குற்றத்தடுப்புப் பிரிவு ஆய்வாளா் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு வழக்கு...

சிவகங்கை அருகேயுள்ள முடி கண்டம் கிராமத்தைச் சோ்ந்த 27 வயது பெண் ஒருவா் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள எண்ணுக்கு தொடா்பு கொண்டாா்.

அப்போது அவா்கள் கூறியபடி 14 தவணைகளில் ரூ. 9,02,555-யை செலுத்தினாா். பின்னா் அவா்களை, அவரால் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், இணையக் குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →