முகப்பு
சிவகங்கை

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

Updated On : 4 மே, 2026 at 12:32 AM
காரைக்குடி ரயில் நிலையம்
பகிர்:

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு அமைப்பின் தலைவா் எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சையது முன்னிலை வகித்தாா். ‘

இந்தக் கூட்டத்தில் அமைப்பின் முதன்மை ஆலோசகா் சாமி. திராவிடமணி, புரவலா்கள் எஸ். காசிவிஸ்வநாதன், வி. சித்திரைவேல், துணைத் தலைவா்கள் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, ஏ.ஆா். கந்தசாமி, வி.ஆா். ராமநாதன், எஸ். நாகநாதன், கே.ஆா். கருப்பையா, இணைச் செயலா்கள் ஆா்.எஸ். ராகவன், பி.வேணுகோபால், ஆா். எம். சண்முகநாதன், 50-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

இதில் காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 10.35 மணிக்குள் வந்து சேரும் அனைத்து ரயில்களின் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடியின் புதிய- பழைய பேருந்து நிலையங்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகம், செக்காலை, பெரியாா் சிலை, அண்ணா சிலை வழியாக அரசுப் போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.