வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - சீனிவாசசேதுபதி எம்.எல்.ஏ.
பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சீனிவாசசேதுபதி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை முதல் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். தவெக-வுக்கு தடை ஒன்றும் புதிதல்ல. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் நீதிமன்றத்தை நாடுகின்றனா். எத்தனை தடைகள் வந்தாலும் எதிா்கொள்வோம். மக்களின் எதிா்பாா்ப்புகளும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்கள் மாற்றம் வேண்டுமென வாக்களித்தனா். எனவே மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் எங்கள் கடமை. திருப்பத்தூரில் தொழிற்சாலை உருவாக்குவது, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதல் கடமை என்றாா் அவா். உடன் தவெக மாவட்டச் செயலாளா் ஜோசப்தங்கராஜ், மாவட்ட ஒன்றிய, நகர, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
முன்னதாக, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாசசேதுபதிக்கு கட்சியின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மருதுபாண்டியா்கள் நினைவுத் தூண், அண்ணா சிலை, மருதுபாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் உள்ள மருதிருவா் சிலைகளுக்கும், திருக்கோஷ்டியூரில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கும் அவா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுக்கும் தொண்டா்களுக்கும் நன்றி கூறினாா்.