தேனி

ஆண்டிபட்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் சாவு

DIN

ஆண்டிபட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்ததாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ் புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் விக்னேஷ் (4). இச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை  அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அவன் மீது அங்கிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. 
 இதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.  இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT