கம்பம்மெட்டு மலைச்சாலையில் பைக்-டேங்கர் லாரி மோதல்: கணவன்- மனைவி பலத்த காயம்
கம்பம் அருகே கம்பம்மெட்டு மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிளும், டேங்கர் லாரியும் மோதியதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
கம்பம் அருகே கம்பம்மெட்டு மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிளும், டேங்கர் லாரியும் மோதியதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.
கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (28), இவரது மனைவி கார்த்திகா (25). இருவரும் கேரள மாநிலம் கட்டப்பனை அருகே உள்ள வல்லக்கடவு, ஏலக்காய் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜெகன், கம்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு, கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் மனைவி கார்த்திகாவுடன் சென்றார்.
கம்பம்மெட்டு மலைச்சாலையின் 16 ஆவது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது கம்பம்மெட்டிலிருந்து, கம்பம் நோக்கி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் அவர்கள் இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு ராம்ஜி நகரைச் சேர்ந்த லோகேஷ் (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.