ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸலைட் ஆஜர்
ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸலைட் மகாலிங்கத்தை க்யூ பிரிவு போலீஸார் செவ்வாயக்கிழமை ஆஜர்படுத்தினர்.
ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நக்ஸலைட் மகாலிங்கத்தை க்யூ பிரிவு போலீஸார் செவ்வாயக்கிழமை ஆஜர்படுத்தினர்.
வருசநாடு பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு நக்ஸலைட் மகாலிங்கம் மற்றும் முருகானந்தம், லெனின் (எ) மருது, பாலமுருகன், யோகேஷ், மதன் ஆகியோர் பதுங்கியிருந்தார். அப்போது ஐந்து பேரையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பாஸ்கரன் முன் மகாலிங்கத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தனர். விசாரணைக்கு பின் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி ஆஜர் செய்ய மாஜிஸ்திரேட் உத்திரவிட்டார்.