முகப்பு
தேனி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்தும், மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளனர்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:25 AM
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்தும், மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளனர்.
 ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமையன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் புதியதோர் இணையதளம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட செய்தி தொடர்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆண்டிவேல், சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்டத்தலைவர் ஆர்.ராஜாக்கிளி, மாவட்டச் செயலர் க.சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் 
ஆர்.கிருஷ்ணாதாஸ், மாவட்ட அமைப்புச்செயலர் சே.காஜாமைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 பணி பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 10-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்பணியை புறக்கணிப்பது மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆசிரியர் ஆர்.இளங்கோ நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.