ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!
இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அதிக வருவாயாக 2025 ஏப்ரலில்தான் ரூ. 2.23 லட்சம் கோடி உச்சம் தொட்டது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் சாதனையை முறியடிக்கும்வகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 8.7 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.
மக்கள் அதிகளவில் பொருள்கள் வாங்குவதால், உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் 4.3 சதவிகிதம் அதிகரித்து, உள்நாட்டு வரி ரூ. 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டு இறக்குமதி வரி வசூலும் 25.8 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 57,580 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
India’s gross GST collections hit record Rs 2.42 lakh crore in April, up 8.7%
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.