முகப்பு
இந்தியா

ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு

ஜிஎஸ்டி வ்ருவாய் உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அதிக வருவாயாக 2025 ஏப்ரலில்தான் ரூ. 2.23 லட்சம் கோடி உச்சம் தொட்டது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் சாதனையை முறியடிக்கும்வகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 8.7 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.

மக்கள் அதிகளவில் பொருள்கள் வாங்குவதால், உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் 4.3 சதவிகிதம் அதிகரித்து, உள்நாட்டு வரி ரூ. 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டு இறக்குமதி வரி வசூலும் 25.8 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 57,580 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

summary

India’s gross GST collections hit record Rs 2.42 lakh crore in April, up 8.7%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.