வீரபாண்டியில் செல்லிடப்பேசி திருடிய 3 பேர் கைது
வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை காணச் சென்றிருந்தவரின் செல்லிடப்பேசியை திருடியதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை காணச் சென்றிருந்தவரின் செல்லிடப்பேசியை திருடியதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
தேனி, பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் சரவணக்குமார்(27). இவர், வீரபாண்டிக்கு சித்திரை திருவிழாவை காணச் சென்றுள்ளார். அங்கு வீரபாண்டி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(23), கருப்பசாமி(23), பழனிக்குமார்(20) ஆகியோர், சரவணக்குமார் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்லிடபேசியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சரவணக்குமார் மற்றும் அப் பகுதியில் இருந்தவர்கள், மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சரவணக்குமார் அளித்த புகாரின் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேல், கருப்பசாமி, பழனிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.