முகப்பு
தேனி

ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.

Updated On : 22 மே, 2018 at 12:31 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி,கொசவபட்டி,சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி, கே.கீரனூர், மண்டவாடி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் கத்திரிக்காய், மிளகாய், கொத்தவரை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமாக பயிரிடப்படும். தற்போது விவசாயிகள் அவற்றை தவிர்த்து கம்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காய்கறிகளுக்கு நிலையான விலை கிடைப்பது இல்லை. இதனால் மாற்றுப் பயிரான கம்புக்கு நிலையான விலை கிடைப்பதால் அவற்றை பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல வெள்ளைச்சோளம், ராகி உள்ளிட்டவைகளையும் பயிர் செய்ய இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.