தேனி

பாஜக ஆட்சியில் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்: காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய் தத்

DIN

நாட்டில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ள நிலையில், பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பாஜக ஆட்சி பயனளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
    தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின்  ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், தேனி நகரத் தலைவர் முனியாண்டி, வட்டாரத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜே.எம்.ஆருண், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசன் ஆரூண்,  சோழவந்தான் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.சந்திரசேகரன்,  காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலர்கள் டி.செல்வம், அருள் பெத்தையா ஆகியோர் பேசினர்.
காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய் தத் பேசியது:  நரேந்திரமோடி பிரதமர் ஆன பிறகு  ஏழை மற்றும் உழைக்கும் மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல், எரிவாயு, பால், பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ள நிலையில், பெரும் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு மட்டுமே பாஜக ஆட்சி பயன் அளிக்கிறது. ரஃபேல் போர் விமான ஊழலில் மக்களின் வரிப் பணம் ரூ.41,250 கோடி சுரண்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் விவாதிக்க அழைத்தற்கு பிரதமர் மறுத்து விட்டார். போர் விமானத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் உரிமத்தை இந்துஸ்தான் நிறுவனத்திற்குத் தான் வழங்க வேண்டும். மாறாக, இந்த உரிமத்தை தனியாருக்குச் சொந்தமான பெரும் நிறுவனத்திற்கு பாஜக அரசு வழங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தேச பாதுகாப்பிற்காக 126 போர் விமானங்கள் வாங்க முயன்ற போது அதை பாஜக வினர் தடுத்தனர். தற்போது  ரஃபேல் போர் விமானம் வாங்கப்பட்டது அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கூட தெரியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT