தேனி

போடி நடுநிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை, கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பள்ளியில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடங்களிட்டு பங்கேற்றனர். சிறப்பாக வேடமணிந்த குழந்தைகளை பெற்றோர்கள் 3 பேர் கொண்ட நடுவர் குழுவினர் தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மாணவர்கள், பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT