தேனி

பெரியகுளம் அருகே வனப்பகுதியில் தீ

DIN

பெரியகுளம் அருகே ஊரடி, ஊத்துக்காடு பகுதிகளில் வியாழக்கிழமை முதல் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
   பெரியகுளம் அருகே அகமலை, சின்னூர், பெரியூர்,அலங்காரம் என 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் அகமலைப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஊரடி , ஊத்துக்காடு பகுதியில் தனியார் நிலங்களில் தீ வைத்துள்ளனர். அது மளமளவென பற்றி வனப்பகுதிக்கும் பரவியது. இதுபள்ளமான பகுதி என்பதால் வனத்துறையினர் கயிற்றின் மூலம் கீழே இறங்கி தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT