தேனி

தேனியில் ஜன.18-இல் சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்கின்றனர். 
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் சிக்கல் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT