தேனி

தேனியில் பெண் தொழிலாளி சந்தேக மரணம்: போலீஸ் விசாரணை

DIN

தேனியில் பெண் தொழிலாளி சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்ததாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி, கம்போஸ்டு ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி சாந்தி (55). இவர், தேனி உழவர் சந்தையில் உள்ள காய்கறிக் கடைகளில் வேலை செய்து வந்துள்ளார். 
இந்நிலையில், உழவர் சந்தை அருகே சாந்தி நைலான் கயிற்றில் வாய் கட்டப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தியின் சகோதரர் சுகுமார் அளித்தப் புகாரின் பேரில் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT